ஜெய்பூர் - மும்பை இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு என புரளி, அதிகாரிகள் விசாரணை

ஜெய்பூர் - மும்பை இடையிலான இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது புரளி என தெரியவந்துள்ளது.
ஜெய்பூர் - மும்பை இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு என புரளி, அதிகாரிகள் விசாரணை
Published on

புதுடெல்லி,

இண்டிகோ சேவை மையத்திற்கு இன்று காலை 5:30 மணியளவில் மர்மநபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பு விடுத்த நபர் ஜெய்பூர் - மும்பை இடையில் சேவையில் இருக்கும் 6E 218 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அழைப்பு வருவதற்கு முன்னதாக விமானம் புறப்பட்டுவிட்டது. 5:05 மணிக்கு ஜெய்பூரில் இருந்து புறப்படும் விமானம் காலை 7 மணிக்கு மும்பையை சென்றடையும், அதன்படி விமானம் சென்றடைந்தது. இதற்கிடையே விமான நிறுவனம் வெடிகுண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டு குழுவிற்கு அழைப்பு விடுத்தது, விதிமுறைகளின்படி தகவல் தெரிவித்தது. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் புரளி என தெரியவந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com