தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் - மத்திய அரசு

தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் விரும்பினால் மக்களவைத் தேர்தலுடன் காஷ்மீர் சட்டசபைத் தேர்தலையும் நடத்த முடியும் - மத்திய அரசு
Published on

2019 பாராளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் விரும்பினால் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பாதுகாப்பு படைகளை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com