முன் ஜாமீன் கோரி நேரடியாக ஐகோர்ட்டை நாட முடியுமா? உச்ச நீதிமன்றம் விசாரணை

வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
புதுடெல்லி,
கேரளாவில் 2 பேர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களை மாநில ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவர்கள் 2 பேரும் முதலில் செசன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்யாமல் நேரடியாக ஐகோர்ட்டை நாடியதும், இவ்வாறு நேரடியாக தாக்கல் செய்யப்படும் முன் ஜாமீன் மனுக்களை விசாரிப்பதை கேரள ஐகோர்ட்டு வழக்கமான நடைமுறையாக கொண்டிருப்பதும் தெரியவந்தது.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கேரள ஐகோர்ட்டு நேரடி முன் ஜாமீன் மனுக்களை அதிகம் விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு தெரிவித்து உள்ளது.எனவே முன் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது மனுதாரரின் முடிவா? அல்லது முதலில் செசன்ஸ் கோர்ட்டை நாட வேண்டியது கட்டாயமா? என்பதை விசாரிப்போம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவுவதற்கு மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ராவை நியமித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.






