காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு

தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்து உள்ளது. #SupremeCourt #CauveryIssue
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு
Published on

புதுடெல்லி

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் கர்நாடகா உத்தரவை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அப்போதே கர்நாடகா சார்பில் 4 டிஎம்சி நீர் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. காவிரி நீர் தரமுடியுமா? முடியாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக மாநிலம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அதில் போதிய மழை இல்லாததால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க இயலாத நிலையில் உள்ளோம் என கூறப்பட்டு உள்ளது. மேலும் அதில் இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தின் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருக்கிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழகம் இடைக்கால மனு தாக்கல் செய்து உள்ளது

தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்து உள்ளது. மே இறுதி வரை செல்லாமல் உடனடியாக கர்நாடக அரசை 4 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். எனவும் அதில் கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com