காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. #CauveryManagementBoard
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
Published on

புதுடெல்லி

காவிரி வரைவு திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலுடன் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு. பி. சிங் - மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். காவிரி விவகாரத்தில் வரைவு செயல் திட்டம் தொடர்பாக தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது .

இன்றே மத்திய அரசு காவிரி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்கிறது. தலைமை வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரில் தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் இன்று காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என கூறபட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com