சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணைக்கு தடை கோரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழக்கு 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணைக்கு தடை கோரும், டாக்டர் அன்புமணி ராமதாசின் வழக்கு விசாரணையை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சி.பி.ஐ. கோர்ட்டு விசாரணைக்கு தடை கோரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழக்கு 19-ந் தேதிக்கு ஒத்திவைப்பு: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், உத்தரபிரதேச மாநிலம் பரேலி ஆகிய இடங்களில் 2 தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் மற்றும் 9 பேர் மீது சி.பி.ஐ. வழக்குதொடர்ந்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஐ.எஸ்.மேத்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 19-ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com