5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்தது

5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்தது
Published on

புதுடெல்லி,

கடந்த 5 ஆண்டுகளில், 2 ஆயிரத்து 157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.

இதில், அதிக அளவாக 2014-ம் ஆண்டு 547 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 316 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. ஊழல் கண்காணிப்பு ஆணையம், கடந்த ஆண்டு 33 ஆயிரத்து 645 ஊழல் புகார்களை பெற்றிருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com