இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் எழுதிய சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் எழுதிய சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன
இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் எழுதிய சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
Published on

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிந்த நிலையில் எப்போது முடிவு வெளியாகும் என்று மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இணையதளத்தில் வெளியானது. தேர்வு முடிவை www.results.nic.in,www.cbs-e-r-esults.nic.in, மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com