9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகளை தொடங்கலாம் - சிபிஎஸ்இ அனுமதி

9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகளை தொடங்குவதற்கு சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பள்ளிகளை தொடங்குவதற்கு சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. மேலும் மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்கவும் சிபிஎஸ்இ அனுமதி வழங்கி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com