போர் நிறுத்தம்: சண்டிகரில் விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் நீக்கம்

சண்டிகரில் கடைகள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டன. நேற்றிரவு முழுவதும் மத்தியஸ்தம் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. இதில், முழு அளவில் மற்றும் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட இரு நாடுகளும் ஒப்பு கொண்டு விட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் அறிவிப்பைத் தொடர்ந்து சண்டிகரில் விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்த 3 நாட்களாக பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வந்ததால், இரவு நேரங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.மேலும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் சண்டிகரில் கடைகள் அனைத்தும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story