

புதுடெல்லி,
தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுவதிலும், அவற்றை உள்நாட்டில் செலவழிப்பதிலும் ஏராளமான புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
இதை கருத்தில் கொண்டு, தொண்டு நிறுவனங்கள் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான இணையதள வசதி நேற்று தொடங்கப்பட்டது.
அதில், வெளிநாட்டு நன்கொடை பெறப்பட்ட விவரங்களும், அப்பணம் இந்தியாவில் செலவழிக்கப்படும் விவரங்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.