டி.ஏ.பி. உரத்தின் விலையை கட்டுக்குள் வைக்க சிறப்பு தொகுப்பு நிதி - மத்திய அரசு ஒப்புதல்

டி.ஏ.பி. உரத்தின் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு சிறப்பு தொகுப்பு நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டி.ஏ.பி. உரத்தின் விலையை கட்டுக்குள் வைக்க சிறப்பு தொகுப்பு நிதி - மத்திய அரசு ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், டை-அம்மோனியம் பாஸ்பேட்(டி.ஏ.பி.) உரத்தின் விலையை கட்டுக்குள் வைக்கும் வகையில், விவசாயிகள் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையை ரூ.1,350-க்கு தொடர்ந்து பெறுவதை உறுதி செய்வதற்காக, ரூ.3,850 கோடிக்கு சிறப்பு தொகுப்பு நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த சிறப்பு தொகுப்பு நிதி 2025-ம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அஸ்வினி வைஷ்ணவ், விவசாயிகளுக்கு மலிவு விலையில் டி.ஏ.பி. உரம் கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com