கொரோனா நடவடிக்கை: அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுரை

மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா நடவடிக்கை: அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுரை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள்.

* கொரோனா வைரசை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடுங்கள்.

* செயற்கை சுவாச கருவிகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், மருந்துகளை தயாராக வைத்திருங்கள்.

* மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com