

புதுடெல்லி,
கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுமிகளுக்கான நாடு தழுவிய ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது. இதன்படி கார்டசில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.
இந்தத் தன்னார்வத் திட்டம் வரும் வாரங்களில் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. உயிருக்கு ஆபத்தான இந்த நோய்க்கான எதிர்ப்புச் சக்தியை அனைவருக்கும் சமமாக விரிவுபடுத்துவது, பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றான இதற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவது ஆகியவைதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
உலகின் 160 நாடுகளில் நடைமுறையில் உள்ள திட்டத்தில் இந்தியாவும் இணைகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.