தமிழ்நாட்டுக்கு ரூ.127½ கோடி நிதி: மத்திய அரசு விடுவித்தது

தமிழ்நாட்டுக்கு ரூ.127½ கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ.127½ கோடி நிதி: மத்திய அரசு விடுவித்தது
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு 2025-2026-ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியமாக ரூ.127 கோடியே 58 லட்சத்தை விடுவித்து உள்ளது. 2,901 கிராம பஞ்சாயத்துகள், 74 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 9 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு இந்த நிதி கிடைக்கும்.

இதைப்போல 2024-2025ம் நிதியாண்டில் அசாமுக்கு ரூ.214 கோடியே 54 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிதி கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்கல் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com