21 ஆயிரம் கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்

21 ஆயிரம் கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
21 ஆயிரம் கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

இந்திய கடற்படைக்கு பாதுகாப்பு பணிகளுக்காக ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 111 ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹெலிகாப்டர் கொள்முதல் உட்பட மொத்தம் 46 ஆயிரம் கோடி மதிப்பிலான தளவாடங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்களை கொள்முதல் செய்யும் குழுவின் கூட்டம் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மேற்கூறிய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com