அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு

மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீல் கே.கே.வேணுகோபால் (வயது 90) கடந்த 2017-ம் ஆண்டு 3 ஆண்டு கால பதவியில் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்தது.
அட்டர்னி ஜெனரல் வேணுகோபாலின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிப்பு
Published on

இதையடுத்து அவர் கேட்டு கொண்டதற்கு இணங்க, அவருக்கு மேலும் ஓராண்டு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும்

முக்கிய வழக்குகளில் ஆஜராகிவருவதையும், வக்கீலாக நீண்டகாலம் அவருக்குள்ள அனுபவத்தையும் கருத்தில்கொண்டு அவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்

வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com