

ஆனால், லோக்பால் அமைப்பு அமலுக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், விசாரணை இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்கவில்லை என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில் ஆணையம் மேலும் கூறியிருப்பதாவது:-
விசாரணை இயக்குனர் நியமிக்கப்படா விட்டாலும், நாங்கள் புகார்களை பெற்று வருகிறோம். கடந்த மார்ச் மாத நிலவரப்படி, லோக்பாலிடம் இருந்து 41 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 36 புகார்களை விசாரித்து முடித்து அறிக்கை அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு ஆணையம் கூறியுள்ளது.