ஜி எஸ் டி அமலுக்கு வரும்போது பல்வேறு சோதனைச் சாவடிகள் மூடப்படும் - மத்திய அமைச்சர்

ஜி எஸ் டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும்போது பல்வேறு சோதனைச் சாவடிகள் மூடப்படும் என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
ஜி எஸ் டி அமலுக்கு வரும்போது பல்வேறு சோதனைச் சாவடிகள் மூடப்படும் - மத்திய அமைச்சர்
Published on

புதுடெல்லி

கருத்தரங்கம் ஒன்றில் பேசுகையில் அவர், கால்நடை வளர்ப்பு, சுரங்கம் மற்றும் வனம் தொடர்பான சோதனைச் சாவடிகள் மூடப்படும். ஏனெனில் இவற்றை நடத்துவது காலத்தை வீணடிப்பதாக இருக்கும் என்பதால் மூடப்படுகின்றன என்றார் அமைச்சர்.

ஜி எஸ் டி வரிமுறை சுமார் 165 ஆண்டுகளாக உலகில் உள்ளது; முதன் முதலில் அது பிரான்ஸ்சில் நடைமுறைக்கு வந்தது என்று அவர் கூறினார். அமைச்சருக்கு முன் பேசிய வருவாய் செயலர் அஸ்முக் ஆதியா ஜி எஸ் டி வரி முறை நடைமுறைக்கு வந்தப்பிறகு ஒரு சில சோதனைச் சாவடிகளே திறந்திருக்கும் என்றார்.ஏனெனில் ஜி எஸ் டி வரிமுறையின் கீழ் பெரும்பாலான துறைகள் வந்துவிடுகின்றன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com