

புதுச்சேரி,
கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கான இழப்பை சரி கட்டும் வகையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்துவதாக புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.