

அவர்களில் இருவர், கடந்த 2015-ம் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்கள். மற்ற இருவரும், 2013-ல் ஒரு வாக்குச்சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தாண்டேவாடா எஸ்.பி. அபிஷேக் பல்லவா கூறினார். நக்சலைட்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டமான, அவர்களை சொந்த கிராமம், வீட்டுக்கு திரும்ப அழைக்கும் லோன் வரத்து, சரணடைந்த 4 நக்சலைட்டுகளையும் ஈர்த்துள்ளதாக அவர் கூறினார். இத்திட்டத்தில் இதுவரை 386 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.