சார்ஜ் செய்தபடியே செல்போனில் வீடியோ கேம் விளையாடிய போது செல்போன் வெடித்து சிறுவன் பலி

சத்தீஷ்கர் மாநிலத்தில் சார்ஜ் செய்தபடியே செல்போனில் வீடியோ கேம் விளையாடிய போது அது வெடித்ததில் சிறுவன் பலியானான்.
சார்ஜ் செய்தபடியே செல்போனில் வீடியோ கேம் விளையாடிய போது செல்போன் வெடித்து சிறுவன் பலி
Published on

ராய்ப்பூர்,

சிறுவர்கள் இப்போது செல்போனில் அதிகம் வீடியோ கேம் விளையாடுகிறார்கள். இதனால் செல்போனில் சார்ஜ் குறைந்து விடுகிறது. சார்ஜ் போட்டுக் கொண்டே விளையாடுகிறார்கள்.

இது ஆபத்து என்பதை உணராமல் சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ரவி சோன்வான் குத்ராப்பரா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருந்தான்.

வெகு நேரம் விளையாடியதால் சார்ஜ் குறைந்து கொண்டே போனது. இதனால் மின்சார பிளக்கில் சார்ஜ் போட்டப்படியே விளையாட்டை தொடர்ந்தான். ஏற்கனவே சூடாகி இருந்த செல்போன் சார்ஜ் போட்டதால் மேலும் சூடாகி திடீர் என்று வெடித்தது. குறைந்த சக்தி கொண்ட வெடி பொருள் வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது.

சிறுவன் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவனுடன் வேடிக்கை பார்த்த மற்றொரு சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிறுவன் ரவிக்கு காயம் அதிகம் இருந்ததால் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம் காரணமாக சிறுவனை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு சிறிது நேரத்தில் சிறுவன் ரவி உயிரிழந்தார்.

மற்றொரு சிறுவனுக்கு லேசான காயம் என்பதால் உயிர் தப்பினான். செல்போன் வெடி குண்டு போல் வெடித்து சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் சத்தீஷ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com