சத்தீஷ்கரில் 5 நக்சலைட்டுகள் கைது

சத்தீஷ்கரில் 5 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சுக்மா,

சத்தீஷ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா நகரில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த 3 நக்சலைட்டுகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பொது சொத்துகளை சேதப்படுத்தியது, பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியது போன்ற நாசவேலைகளில் ஈடுபட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

அதேபோல் சுக்மா மாவட்டத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் சிக்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com