சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு சனிக்கிழமை பள்ளிக்கு புத்தகப்பை தேவையில்லை "யோகா, விளையாட்டு, பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும்"

சத்தீஸ்கரில் புபேஸ் பாகல் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு சனிக்கிழமை பள்ளிக்கு புத்தகப்பை தேவையில்லை "யோகா, விளையாட்டு, பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும்"
Published on

ராய்பூர்,

சத்தீஸ்கரில் புபேஸ் பாகல் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பள்ளிக்கல்வித் துறை நேற்று ஒரு புதுமையான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இனி சனிக்கிழமை நடைபெறும் பள்ளிநாட்களில் மாணவர்கள் புத்தகப்பை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது. அன்றைய தினம் முழுவதும், யோகா, உடற்பயிற்சி, விளையாட்டுகள் மற்றும் கலை பண்பாட்டு வகுப்புகள் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

மாணவர்கள் பள்ளிக் கல்வியை விருப்பத்துடன் படிக்கவும், கல்வியை செயல்முறை சார்ந்ததாக மாற்றும் நோக்கத்துடனும் இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை கூறி உள்ளது. இது மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி கல்வியில் ஈடுபாட்டை வளர்க்க உதவும் என்றும் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com