ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மண்டபத்தின் மேலாபத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசினை வழங்கினார்.
ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Published on

சென்னை,

, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால், பாரதியார் மண்டபம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அம்மண்டபத்தையும் மகாகவி பாரதியார் உருவப் படத்தையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சென்னை மேயர் பிரியா ராஜன், இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுக்கு முன்னதாகக் ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசினை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com