லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்: பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்: பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், அக்கட்சியின் மற்ற தலைவர்களும் தொடர்ந்து குறை கூறி வருகிறார்கள். இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்துவிட்டதாகவும், ஆனால் பிரதமர் மோடி இதை ஒப்புக்கொள்ள மறுப்பதோடு, மறைப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ராணுவ அமைச்சக தகவல்களை மேற்கோள் காட்டி லடாக் எல்லையில் குக்ராங் நலா, கோக்ரா, பங்கோங் சோ ஏரியின் வடக்கு கரை பகுதிகளில் கடந்த மே 17 மற்றும் 18-ந் தேதிகளில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்ததாக ஒரு பத்திரிகையில் வெளியான தகவலை இணைத்து உள்ளார். அத்துடன், சீனாவின் அத்துமீறலை ராணுவ அமைச்சகம் ஒப்புக் கொள்ளும் போது பிரதமர் மோடி ஏன் பொய் சொல்கிறார்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com