கிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி

தாவணகெரேயில் கிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
கிரெடிட் கார்டை புதுப்பிப்பதாக கூறி வாலிபரிடம் ரூ.90 ஆயிரம் மோசடி
Published on

தாவணகெரே-

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா ஒசகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது35). இவர் ஜகலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இ்ந்தநிலையில் மஞ்சுநாத் எண்ணிற்கு நேற்றுமுன்தினம் மர்மநபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர், வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்களுடைய கிரெடிட் கார்டு காலாவதியாகி விட்டதாகவும் அதனை புதுப்பிக்க வேண்டும் எனவும் மஞ்சுநாத்திடம் கூறியுள்ளார்.

அதனை நம்பிய மஞ்சுநாத் அந்த நபர் கூறிய தகவல்கள் அனைத்தையும் அவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மஞ்சுநாத் எண்ணிற்கு ஓ.டி.பி. வந்தது. அதனையும் அந்த நபருக்கு தெரிவித்தார். இதையடுத்து ரூ.90 ஆயிரம் வங்கி கணக்கில் இ்ருந்து எடுக்கப்பட்டதாக மஞ்சுநாத்திற்கு குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து மர்மநபருக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவரது எண் சுவிட்ச்- ஆப் என வந்தது. இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மஞ்சுநாத் தாவணகெரே சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com