நிலக்கரி ஊழல் வழக்கு: முன்னாள் மத்திய மந்திரி திலீப் ராயின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு - டெல்லி ஐகோர்ட் உத்தரவு

நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி திலீப் ராயின் சிறை தண்டனையை நிறுத்திவைத்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நிலக்கரி ஊழல் வழக்கு: முன்னாள் மத்திய மந்திரி திலீப் ராயின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு - டெல்லி ஐகோர்ட் உத்தரவு
Published on

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அரசில் மத்திய நிலக்கரி துறை இணை மந்திரியாக இருந்தவர் திலீப் ராய். அவர் மீது நிலக்கரி படுகை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில், திலீப் ராய் உள்பட 4 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. திலீப் ராய்க்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. அதே சமயத்தில், மேல்முறையீடு செய்வதற்காக, ஒரு மாத கால ஜாமீனும் அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் திலீப் ராய் மேல்முறையீடு செய்தார். நேற்று இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுரேஷ்குமார் கெயிட், திலீப் ராய்க்கான 3 ஆண்டு ஜெயில் தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். பதில் மனு தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com