இந்தியா-சீனா இடையே வருகிற 11-ந் தேதி 15-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை...!

இந்தியா-சீனா இடையே வருகிற 11-ந் தேதி 15-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடக்கிறது
இந்தியா-சீனா இடையே வருகிற 11-ந் தேதி 15-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை...!
Published on

புதுடெல்லி,

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்தியா-சீன படைகளிடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த ராணுவ ரீதியிலான, தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகளால், பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகள், கல்வான், கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டன.

இன்னும் சில இடங்களில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இதுதொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ராணுவ மட்டத்திலான 15-வது சுற்று பேச்சுவார்த்தை 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

லடாக்கில் உள்ள சுசுல் மால்டோ சந்திப்பு முனையத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இ்ந்த தகவலை நேற்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com