நடிகை கங்கணா மீதான புகார்; நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்

நடிகை கங்கணா மீதான புகார் குறித்து போலீசார் நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர்.
நடிகை கங்கணா மீதான புகார்; நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்
Published on

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக அலிப் காசிப் கான் தேஷ்முக் என்ற வக்கீல் அம்போலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த கோர்ட்டு இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அம்போலி போலீசாருக்கு உத்தரவிட்டது. கோர்ட்டு வழங்கிய காலக்கெடு முடிந்து போலீசார் அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருந்தனர்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீதான புகார் குறித்து நடத்திய விசாரணை அறிக்கையை கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். இதையடுத்து கோர்ட்டு விசாரணையை ஏப்ரல் 5-ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com