நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் கண்டனம்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குநாகளாக உள்ள 'யங் இந்தியா' நிறுவனம், 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜானல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது.

இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடாந்தா. இந்தப் பண மோசடி தொடாபாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாஜுன காகே, பவன் குமா பன்சால் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சாடியுள்ளது. மேலும், நாட்டின் பிரதான எதிர்க்கட்சி மீதான தொடர்ச்சியான தாக்குதலின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை எனவும் காங்கிரஸ் சாடியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com