மத்திய அரசைக் கண்டித்து நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- தம்பிதுரை எம்.பி.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தம்பிதுரை எம்பி கூறினார். #CauveryManagementBoard #ADMK
மத்திய அரசைக் கண்டித்து நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- தம்பிதுரை எம்.பி.
Published on

புதுடெல்லி

டெல்லியில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்தார். அப்போது வடகிழக்கு மாநில பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

டெல்லியில் அதிமுக எம்.பிக்கள் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது தம்பிதுரை எம்பி. கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி அதிமுக எம்.பி.க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் மக்களவையில் அளிக்கப்பட்டு உள்ளது.

முதலில் திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றட்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து அதிமுக குரல் கொடுக்கும். தமிழக அரசின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் தெரிவித்துள்ளேன்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவராக இருக்கிறார். காவிரி விவகாரத்தில் திமுக எம்.பிக்கள் முதலில் ராஜினாமா செய்ய முன்வரட்டும். அ.தி.மு.க எம்பிக்களை ராஜினாமா செய்ய சொல்ல ஸ்டாலின் எங்கள் தலைவர் அல்ல. அ.தி.மு.க எம்.பி.க்கள் ராஜினாமா குறித்து தலைமைதான் முடிவு எடுக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசைக் கண்டித்து நாளை காலை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தமிழக எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என கூறினார்.

இன்று ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி பாராளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com