பிரதமரின் அழுத்தத்தால் விஜய் படத்திற்கு சிக்கல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஒரு கலைஞரின் படைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அழுத்தத்தால் விஜய் படத்திற்கு சிக்கல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு..

நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகளை தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளத்தக்கவை என்றாலும், ஒரு கலைஞரின் படைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் ஆதாயங்களுக்காக சினிமாக்களை தணிக்கை செய்வதை தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அரசியல் சண்டைகளில் கலை மற்றும் பொழுதுபோக்கு பகடைக்காயாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

அதிகாரிகள் மீதான உங்கள் அழுத்தம் காரணமாக விஜய்யின் படம் தாமதங்களை சந்தித்துள்ளது. இது தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைத்து, படைப்பு சுதந்திரத்தை மதிப்போம்.

நடிகர் விஜய் எதிராக அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்த்து உங்கள் சக்தியை நிரூபிக்கவும் மோடி ஜி,

உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com