காங்கிரஸ் வேட்பாளர் கைது; நியாயமன தேர்தல்கள் மீது பாஜக.வுக்கு நம்பிக்கை இல்லை - ராகுல்காந்தி

மிலன் பிரதான் கைது சம்பவம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல்காந்தி
காங்கிரஸ்
Published on

புதுடெல்லி,

நியாயமன தேர்தல்கள் மீது பாஜக.வுக்கு நம்பிக்கை இல்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகி றது. முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி 2 இடங்களில் வெற்றி பெற்றதால் நந்தி கிராம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ்

பா.ஜனதா சார்பில் ஹாசி ரானி போட்டியிடுகிறார். இதே போல் காங்கிரஸ், கம்யூனிஸ்டு வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். கடைசி நேரத்தில் மம்தா பானார்ஜி கட்சியின் வேட் பாளர் மனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து நந்திகிராம் தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இந்த நிலையில் நந்தி கிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த நிலையில் அவர் கைதாகியுள்ளார்.

மிலன் பிரதான் மீது வழக்குப்பதிவு

2007-ம் ஆண்டு நந்தி கிராமில் நடந்த நிலம் கையக்ப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மிலன் பிரதான் மீது அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை காரணம் காட்டி அவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ராகுல் காந்தி கண்டனம்

நந்திகிராம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கைது செய்யப்பட்டதற்கு நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நந்திகிராம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது

செய்யப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் ஜனநாயகத்தின் படு கொலையாகும்.

பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை

நியாயமான தேர்தல்கள் மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் சில சமயங்களில் வாக்கு திருட்டு, சில சமயங்களில் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் சில சம யங்களில் கட்சிகளை அப கரித்தல் ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தைத் தக்க வைத்து கொள்ள அது முயல்கிறது.

அவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்ப வில்லை.மாறாக தேர்தல் போட்டியை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவே விரும்பு கிறார்கள். காங்கிரஸ் அஞ்சாது. ஒருபோதும் பணி யாது. நாங்கள் போராடு வோம். நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com