நந்திகிராமில் மம்தா ஆதரவளித்த காங்.வேட்பாளர் கைது

அக்.6-ம் டேதி நந்திகிராம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
காங்.வேட்பாளர் கைது
மம்தா
Published on

கொல்கத்தா,

மம்தா ஆதரவு அளித்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க முதல்-மந்திரி சுவேந்து அதிகாரி , சட்டசபை தேர்தலில் நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த தொகுதிக்கும், ரெஜிநகர் தொகுதிக்கும் அக்.,6 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதில் பாஜக, காங்கிரஸ், மம்தா ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தனர். மம்தா தரப்பில் சஞ்சிதா தேவ் பிரதான் வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று அவர், முதல்-மந்திரி சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசினார். இதன் பிறகு அவர் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து இருந்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது அணி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே கொலை வழக்கில் மிலன் பிரதானை போலீசார் கைது செய்து உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

மம்தா பானர்ஜி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், மிலன் பிரதான் பழைய கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே இருந்த கொலை வழக்கின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியை பொறுத்தவரை அது கடந்த சில தேர்தல்களாக மேற்கு வங்க அரசியலில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com