குலாம்நபி ஆசாத்துடன், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் சந்திப்பு

ஆனந்த் சர்மா, பிருதிவிராஜ் சவான், பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர் டெல்லியில் குலாம்நபி ஆசாத்தை சந்தித்து பேசினர்.
குலாம்நபி ஆசாத்துடன், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் சந்திப்பு
Published on

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், கடந்த 26-ந் தேதி காங்கிரசில் இருந்து விலகினார். அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.குலாம்நபி ஆசாத், காங்கிரசில் 23 அதிருப்தி தலைவர்கள் அடங்கிய ஜி-23 குழுவில் செயல்பட்டு வந்தவர்.

இந்தநிலையில், அந்த குழுவை சேர்ந்த ஆனந்த் சர்மா, பிருதிவிராஜ் சவான், பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர் நேற்று டெல்லியில் குலாம்நபி ஆசாத்தை சந்தித்து பேசினர். ஆசாத் இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது. ஜி-23 குழுவின் எதிர்கால திட்டம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த குழுவை சேர்ந்த சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட பரிசீலித்து வருகிறார். அதனால் உட்கட்சி தேர்தல் பற்றியும் அவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com