

புதுடெல்லி
மேற்குவங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் மார்ச் 27ம் தேதி முதல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் 30 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
காங்கிரஸ் கட்சி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மக்களவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சல்மான் குர்ஷித், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் கிரிக்கெட்டர் நவ்ஜோத் சிங் சித்து, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜிதின் பிரசாதா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நிலையான தலைவர் தேவை என்பதை வலியுறுத்தி கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல் , ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, மனீஷ் திவாரி உள்ளிட்ட ஜி 23 தலைவர்களில் ஒருவரின் பெயரும் இடம்பெறவில்லை.