

புதுடெல்லி,
வரும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய குழுக்களை அமைத்து ராகுல் காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார். 9 பேர் கொண்ட மைய முழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு, 13 பேர் கொண்ட விளம்பர குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களில், ப சிதம்பரம் ஏகே அந்தோனி, குலாம் நபி ஆசாத், அசோக் கெகால்ட், மல்லிகார்ஜுன் கார்கே, அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.