2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழுவை அமைத்தார் ராகுல் காந்தி

2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழுவை அமைத்தார் ராகுல் காந்தி
2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் குழுவை அமைத்தார் ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

வரும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய குழுக்களை அமைத்து ராகுல் காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார். 9 பேர் கொண்ட மைய முழு, 19 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு, 13 பேர் கொண்ட விளம்பர குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்களில், ப சிதம்பரம் ஏகே அந்தோனி, குலாம் நபி ஆசாத், அசோக் கெகால்ட், மல்லிகார்ஜுன் கார்கே, அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com