ஜவகர்லால் நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.
ஜவகர்லால் நேரு நினைவு தினம்: சோனியா காந்தி அஞ்சலி
Published on

புதுடெல்லி,

சுந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் ஜவகர்லால் நேரு. 1947-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற ஜவர்லால் நேரு தான் இறக்கும் வரை 1964-ம் பிரதமராக பதவி வகித்தார். நேரு 1964 மே 27-ம் தேதி மரணமடைந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஜவர்லால் நேருவின் 58-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com