முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த நேரு கடந்த 1964-ம் ஆண்டு மே 27-ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இன்று ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, ராஜ்யசபா எம்.பி. அஜய் மாக்கன் ஆகியோர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com