ஓராண்டாக காலியாக உள்ள மக்களவை துணை சபாநாயகர் பதவியை நிரப்ப வேண்டும்: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்

ஓராண்டாக காலியாக இருக்கும் மக்களவை துணை சபாநாயகர் பதவியை நிரப்ப வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது.
ஓராண்டாக காலியாக உள்ள மக்களவை துணை சபாநாயகர் பதவியை நிரப்ப வேண்டும்: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று ஒரு கடிதம் எழுதினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தற்போதைய மக்களவை ஓராண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டு விட்டது. அப்போது இருந்தே மக்களவை துணை சபாநாயகர் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது.

துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு அளிப்பது மரபு. இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றம் புதிய சூழ்நிலையில் நடக்க உள்ளது. ஏற்கனவே ஓராண்டு வீணாகி விட்டது.

எனவே, இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே துணை சபாநாயகர் பதவியை நிரப்ப வேண்டும். தேர்தல் மூலமாகவோ அல்லது ஒருமனதாகவோ தேர்வு செய்ய வேண்டும்.

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் 14-ந் தேதி நடக்கிறது. எனவே, மக்களவைக்கும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க இதுவே தக்க தருணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com