370-வது பிரிவு பற்றிய திக்விஜய்சிங் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்; ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிப்பு ஆகியவை மறுஆய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியிருந்தார். சர்ச்சை ஏற்படுத்திய இக்கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது.
370-வது பிரிவு பற்றிய திக்விஜய்சிங் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்; ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்
Published on

இந்தநிலையில், பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

370-வது பிரிவு பற்றிய நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் தலைமை ஒரு நாளுக்கு மேல் மவுனம் சாதித்து வருகிறது. திக்விஜய்சிங் சூசகமாக தெரிவித்தபடி, 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறதா? மவுனமாக இருக்க வேண்டிய நேரம் முடிந்துவிட்டது. உங்கள் தெளிவான நிலைப்பாட்டை விளக்குங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com