

இந்நிலையில், ரிஷிகேஷை சேர்ந்த பிரபல நகைக்கடைக்காரரான ஹிதேந்திர பன்வார், தனது மனைவியை சாமியார் அனிமேஷ் ஏமாற்றி, ரூ.1.75 கோடி பணம், நகையை பறித்துவிட்டதாக போலீசில் புகார் தெரிவித்தார். தனது மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை சாமியார் மோசடி செய்துவிட்டதாகவும் நகைக்கடைக்காரர் அந்த புகாரில் கூறியிருந்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி சாமியார் அனிமேஷை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகளையும் கைப்பற்றினர். போலீஸ் விசாரணைக்கு பின் அனிமேஷ், 14 நாள் கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். செல்வாக்கு மிக்க நபர்களுடன் படம் எடுத்துக்கொள்ளும் போலி சாமியார் அனிமேஷ், அதைப் பயன்படுத்தி பலரை ஏமாற்றியுள்ளார். ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இருமுறை சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளார். அவர் மோசடி செய்த மற்ற நகைகள், பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்துவருவதாக போலீசார் தெரிவித்தனர்.