இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் ரக போர் விமானங்களை வாங்க முடிவு - விமானப்படை தளபதி தகவல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜாஸ் ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படையை மேலும் பலப்படுத்தும் வகையில் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜாஸ் மார்க்-1ஏ ரக போர் விமானங்களை விமானப்படையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 83 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்க ரூ.48,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 97 தேஜாஸ் மார்க்-1ஏ விமானங்களை வாங்குவதற்கு ரூ.1.15 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாக விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "கூடுதல் 97 தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களை வாங்குவதன் மூலம் இந்திய விமானப்படையில் சேரும் தேஜாஸ் மார்க்-1ஏ போர் விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும். இது தவிர 84 சுகோய்-30எம்கேஐ போர் விமானங்கள் ரூ.60,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும்" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com