புதுச்சேரியில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாநில சுகாதாரத்துறை

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 59 பேருக்கு (1.69 சதவீதம்) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி - 48 பேருக்கும், காரைக்கால் - 3 பேருக்கும், மாஹே - 8 பேருக்கும் என தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் 151 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 757 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 908 பேர் சிகிச்சையில் உள்ளனர். காரைக்கால் திருநள்ளாற்றைச் சேர்ந்த 2 பேர் தொற்று பாதித்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,808 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.47 சதவீதமாக உள்ளது.

புதிதாக 112 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 116 (97.79 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 16 லட்சத்து 6 ஆயிரத்து 844 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 7 லட்சத்து 77 ஆயிரத்து 866 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com