

புதுடெல்லி,
மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலை கழக அடிக்கல் நாட்டு தின நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசும்பொழுது, பிரிட்டனில் புதிய கொரோனா வைரசை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். போராட்டம் இன்னும் முடிந்து விடவில்லை. இது தீவிர விவகாரம். உலகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தடுப்பு மருந்து எடுத்து கொள்ளும் வரை இந்த போராட்டம் தொடரும்.
கொரோனா நெருக்கடிக்கு பின்பு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஆகியோரே உண்மையான சூப்பர்மேன் மற்றும் ஆச்சரிய பெண்மணிகள் என இந்த உலகம் புரிந்து கொண்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவையாற்றிய அவர்களுக்கு நாம் எப்பொழுதும் நன்றி கடன்பட்டவர்களாக இருப்போம் என்று அவர் கூறியுள்ளார்.