இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 38,310 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் இன்று புதிதாக மேலும் 38,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 38,310 பேருக்கு தொற்று உறுதி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணைக்கை 82,67,623 ஆக உயர்ந்துள்ளன,

இன்று காலை அறிவிக்கபட்ட 490 புதிய இறப்புகளுடன், நாட்டில் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 1,23,097 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனாவில் இருந்து மொத்தம் 76,03,121 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர், இது தேசிய மீட்பு வீதத்தை 91.96 சதவீதமாக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. நாட்டில் தற்போது 5,41,405 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று வரை மொத்தம் 11,17,89,350 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று மட்டும் 10,46,247 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com