ஆந்திர மாநில கவர்னர் விஸ்வ பூஷன் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று

ஆந்திர மாநில கவர்னர் விஸ்வ பூஷன் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில கவர்னர் விஸ்வ பூஷன் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநில கவர்னர் விஸ்வ பூஷன் ஹரிசந்தன், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் இருந்து திரும்பியதில் இருந்து அவர் சளி, இருமலால் அவதிப்பட்டார்.

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஜயவாடா ஆஸ்பத்திரி ஒன்றில் அவருக்கு ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், தனி விமானம் மூலம் ஐதராபாத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ளஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com