

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 69,239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 69,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 44 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளுக்கு 7 லட்சத்து 07 ஆயிரத்து 668 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 22 லட்சத்து 80 ஆயிரத்து 567 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். ஒரே நாளில் 912 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,706 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.