கொரோனா தொற்று; மராட்டிய கவர்னர் குணமடைந்து இன்று வீடு திரும்புவார்

மராட்டிய கவர்னர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்புவார் என கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று; மராட்டிய கவர்னர் குணமடைந்து இன்று வீடு திரும்புவார்
Published on

மும்பை,

மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து அவர் உடல்நலம் தேறியுள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து அவர் இன்று வீடு திரும்புவார் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மராட்டியத்தில் தற்போது பரபரப்பான அரசியல் சூழல் காணப்படுகிறது. இந்த சூழலில் மருத்துவமனையில் இருந்து கவர்னர் சிகிச்சை முடிந்து திரும்புகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com